Rajasthan Farmer: நிலத்தில் புதைத்து வைத்த 5 லட்சம் ரூபாய்! கரையான்கள் தின்ற சோகம்!
Rajasthan Farmer: ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாயி ஒருவர் தனது நிலத்தில் புதைத்து வைத்த 5 லட்சம் ரூபாய் பணத்தை கரையான்கள் அரித்துத் தின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கியில் டெபாசிட் செய்யாமல் பாதுகாப்பாக இருக்கும் என நினைத்து நிலத்தில் பணத்தை புதைத்து வைத் து துயரத்தைச் சந்தித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் பாலோத்ரா மாவட்டத்தில் உள்ள நெவாய் கிராமத்தைச் சேர்ந்த மங்கிலால் என்ற விவசாயி, கடந்த ஆண்டு தனது விவசாய நிலத்தின் ஒரு பகுதியை 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். அந்தப் பணத்தை யாருக்கும் தெரியாமல் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்பதற்காக, ஒரு பையில் மூட்டையாகக் கட்டி தனது 6 ஏக்கர் விவசாய நிலத்தில் புதைத்து வைத்துள்ளார்.
Rajasthan Farmer புதைத்த இடத்தை மறந்து தவித்த விவசாயி
சில மாதங்களுக்குப் பிறகு, பணத்தை நிலத்தில் புதைத்து வைத்த இடத்தை மங்கிலால் முற்றிலுமாக மறந்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இந்த விவகாரத்தை தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். குடும்பத்தினர் 6 ஏக்கர் நிலத்தின் பல்வேறு இடங்களில் தோண்டிப் பார்த்தும் பணம் கிடைத்த இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், அண்மையில் நிலத்தில் விதைகள் விதைப்பதற்காகப் டிராக்டர் மூலம் நிலத்தை உழுதபோது, புதைக்கப்பட்ட பணப்பை திடீரென வெளியே வந்தது. இதைப் பார்த்து குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர்.

கரையான்கள் தின்ற நோட்டுகள்: எஸ்பிஐ வங்கி அளித்த ஆலோசனை
ஆனால், அந்தப் பையைத் திறந்து பார்த்த குடும்பத்தினருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. பைக்குள் இருந்த 5 லட்சம் ரூபாய் நோட்டுகளையும் கரையான்கள் (Termites) பெருமளவில் அரித்துத் தின்று நாசமாக்கியிருந்தன.
அவற்றில் சிறிதளவு மட்டுமே சேதமடைந்த சில நோட்டுகளை எடுத்துக்கொண்டு, அந்த குடும்பத்தினர் உள்ளூர் பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India) கிளையை அணுகியுள்ளனர். நோட்டுகளில் உள்ள சீரியல் எண்கள் (Serial numbers) கடுமையாகச் சேதமடைந்துள்ளதால், பணத்தை மாற்றிக்கொள்ள ஜெய்ப்பூர் கிளைக்குச் செல்லுமாறு வங்கி ஊழியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
வங்கியில் பணத்தைப் சேமிக்காமல் நிலத்தில் புதைத்து வைத்து இழப்பைச் சந்தித்த இந்த விவசாயியின் நிலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாங்குனா இப்படி ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளும் அளவுக்கு இந்த சம்பவம் அமைந்துள்ளதால், பொதுமக்கள் தங்களது பணத்தை வங்கிகளில் பாதுகாப்பாகச் சேமிப்பதே சிறந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர்.




